கதிரவனை வழியனுப்பி விட்டு,
கரியதொரு போர்வையை விரித்து, – அதில்
கரையும், வளரும் ஒளிர்மதியையும்,
கண் சிமிட்டும் விண்மீன்களையும் பரப்பி,
கருவிழிகளைப் பூட்டி மாந்தரை
கனவுலகிற்கு அழைத்துச் செல்லும்,
காரிருளே! இரவே!
கரும்பினும் இனியவள், என்
கண்மணி தனிமையில் வாடும் இந்நேரம், அவள்
கலக்கத்தைப் போக்கி, நான் திரும்பும்
காலம் தொலைவில் இல்லை என்றுரைத்து அவள்
கண்ணீர் கழித்து, களிப்பைக் கூட்ட
காடுகள், மலைகள், கடல்கள் கடந்து
காரிருளே! நீ தூது செல்வாயாக!